@MegaRasool_786 தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் பணியாமத்துவதாக கூறி, சிலரிடம் லஞ்சம் வாங்கியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி ஆன நிலையில், அடுத்தகட்டமாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவின் விசாரணையும் பலமுறை தள்ளிப் போனதால், செந்தில் பாலாஜியை விடுதலை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்க துறையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜியை விடுதலை செய்வது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்ததால், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
#flashnews #senthilbalaji #bailpetition #shorts #shortsvideo #supremecourt #shortsfeed #newsshorts #shortsyoutube #shorts